Wednesday, March 27, 2019

Gaspar Noe - Artist Of The Violence

Gaspar noe -“artist of the violence ”


எந்த ஒரு சமரசமும் இன்றி தன் படைப்பை அப்படியே மக்களிடம் கொண்டு செல்வதுதான் 

ஒரு கலைஞனின் முதல் வெற்றி.ஆனால் எல்லா கலைஞருக்கும் அந்த வெற்றி கிடைப்பதில்லை ஒரு சிலரை தவிர.அதில் ஒருவர் தான் பிரஞ்சு இயக்குனர் ஆனா GASPAR NOE. இவரின் படைப்புகள் எந்த ஒரு சமரசமின்றி “அப்பட்டமாக” எடுக்கப்பட்டிருக்கும். இவரின் தனித்தன்மையே அவரின் வன்முறையும் பொய் பூசப்படாத உண்மையும் தான். இவர் படங்களில்  எந்த ஒரு கருத்து திணிப்பும் இருக்காது வாழ்க்கை பற்றிய புதிரான மனித உணர்ச்சிகள் பற்றியே இருக்கும். இவர் படங்களின் colour tone வன்முறைக்கே பிடித்த “சிவப்பு” வண்ணத்தில் தான் இருக்கும் .தன் படங்களின் மொத்த கதையையும் தன் கதாப்பாத்திரங்களின் dialogues வழியே metaphoricகாக சொல்லி விடுவார்.


தன் முதல் படத்திற்கு மக்களை வரவைக்க படாத பாடு படும் இயக்குனர்களின் நடுவே தன் முதல் படமான “I STAND ALONE (1998)” வில் கடைசி முப்பது நிமிடம் தொடங்கும் முன்பே மக்களை வெளியே போக சொல்லி danger card போட்ட மன தைரியம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதே படத்தில் தொடர்ந்து 8 நிமிடங்கள் வாழ்க்கை தத்துவம் பேசும் dialogueகுகள் நமக்குள்ளே பல கேள்விகள் எழுப்பும்.


 Christopher Nolan படமான “MEMENTO”வை பார்த்து இப்படியெல்லாம் படம் எடுக்க  Hollywoodனால் மட்டும் தான் முடியும் என்ற என் எண்ணத்தை சுக்குநுறாய் உடைத்த படம் தான் “IRREVERSIBLE (2002)”இவ்விரண்டு படங்கலுமே Reverse chronology எனும் திரைக்கதை உத்தியில் எடுக்கப்பட்டு இருந்தாலும்  noe யின் வன்முறை பாணி தான் இந்த படத்தின் சிறப்பு.படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலே தன் கேமரா கோணத்தினால் நம் தலை சுற்ற வைத்திருப்பார் noe. படத்தில் ஒருவரின் முகத்தை சிதைக்கபடும் காட்சி வன்முறையின் உச்சம் என்றே சொல்வேன்.அதை சினிமா தன்மை இன்றி படமாக்கபட்டதில் தான் noe தன்னை சிறந்த இயக்குனராக காட்டி கொள்கிறார்.


எல்லோருக்கும் நாம் இறந்த பின்பு என ஆகும் என்று ஒரு கேள்வி இருக்கும் அந்த கேள்வியின் விடையாக அமைந்தது இவரின்

“ENTER THE VOID(2009)”படம்.

படம் முழுவதும் கதாபாத்திரம் POVலேயே கொண்டு சென்றிருப்பார்.படத்தின் ஆரம்பத்திலேயே கதையை பற்றி ஒரு புத்தகத்தை மையமாக சொல்லியிருப்பார்.போதை பழக்கம் இல்லாதவர்கள் கூட பட ஆரம்பத்தில் வரும் dope graphics காட்சிகள் முலம் போதை ஏற்றபடுவார்.


பல போலி காதல் கதைகளில் நடுவே உண்மையான காதலை “நிர்வாணமாக” காட்டியது இவரின் “LOVE(2015)”படம்.காதலும் காமமும் வேறு வேறு இல்லை என்று காமம் சொட்ட சொட்ட சொல்லியிருப்பார்.ஆண்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தான் நல்லவர்கள் கிடைத்தால் காமுகர்கள் என்ற உண்மையை ”கொக்கி குமார் “ தன் நண்பனின் தங்கைக்கு தாலி கட்ட தூண்டிய காமத்தை செல்வராகவன் காட்டியது போல் சொல்லி இருப்பார்.மேலும் இந்த படம் 2015 Cannes Film Festivalலில் தேர்வு செய்யபட்டது தனி சிறப்பு.


திரைக்கதை அமைக்க தேவைப்படும் அனைத்து விதிகளையும் உடைத்த படம் என்று நான் என்னுவது இவரின் “CLIMAX(2018)” இதை பார்த்த பின் படம் எடுக்க கதை கூட தேவையில்லை கலை உணர்வு இருந்தால் போதும் என்று தோன்றியது.கதைமாந்தர்கள் பற்றி முன் பின் கதை கூறாமல் அவர்களின் கதாபாத்திரம் பற்றியும் கதைமாந்தர்களின் உறவுகளை பற்றியும் dialogueயில்யே சொன்னது பாராட்ட வேண்டியது.ஐந்து பக்க scriptவும் பதினைந்து நாள் production dateயில் முடித்த  படம் இது.படத்தில் வரும் நால்வரை தவிர அனைவரும் professional dancers ஆனால் noeயிடம் நடிக்காமல் தப்பிக் முடியுமா??.அப்படி நடிக்க வைத்திருப்பார் noe.இருந்தாலும் noe touchஆன வன்முறை

இந்த படத்தில் குறைவே. “உங்கள் மத்த படத்தில் இருந்து வெளியே போகும் கூட்டத்தின் எண்ணிக்கை climax படத்தில் குறைந்ததை பற்றி என்ன நினைக்கிறீங்க “என்று reporter கேட்ட கேள்விக்கு “என் இயக்கத்தில் தப்பு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் “என்று நகைத்தார்.


கலப்படமற்ற இவரின் படைப்புகளுக்கு ரசிகனாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.noeயின் அடுத்த கலை படைப்புக்காக காத்திருக்கும் ரசிகன்.


- கார்திக்

No comments:

Post a Comment

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...